Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நலிந்த நாடக கலைஞர்களுக்கு உதவ நினைவலைகள் விழா: நடிகர் சங்கம்

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2009 (16:46 IST)
நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் வரும் ஆகஸ்ட் 15 முதல் 23ஆம் தேதி வரை “நினைவலைகள ்” என்ற பெயரில் நாடக விழா நடத்த தமிழக நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராயா நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாரவ ி, துணைத் தலைவர்கள் விஜயகுமார ், மனோரம ா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் 23ஆம் தேதி நினைவலைகள ் என்ற பெயரில் நாடக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அசோகன ், வியட்நாம் வீடு உட்பட பிரபல நாடகங்கள் இதில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் முன்னணி நடிகர்கள் பங்கேற்று நடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதிநாளில் சரத்குமார ், ராதாரவ ி, விஜயகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதுபற்றி சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் நினைவலைகள் விழா நடத்தப்படுகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி ஒப்புதல் தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.

நடிகர்கள் சூர்ய ா, ஸ்ரீகாந்த ், பூச்சி முருகன ், நம்பிராஜன ், கே.ராஜன ், நந்தகுமார ், டி.என்.கிருஷ்ணன ், சுவாத ி, பாத்திமா பாபு ஆகியோர் நடிகர் சங்கத்தின் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments