நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினர்.
இதனிடையே முதலமைச்சர் மீது அவதூறு செய்தி வெளியிட்ட ஆசிரியர் நக்கீரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க.வினர் காவல்துறையினர் புகார் அளித்தனர்.
இந்த புகாரை பதிவு செய்த காவல்துறை, நக்கீரன் கோபாலை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நக்கீரன் கோபாலுக்கும், ஊழியர்களுக்கும் முன் ஜாமீன் வழங்கியது.