கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க பொறுப்பாளர் எஸ்.சாரங்கபாணி அப்பதவியிலிருந்து கட்சித் தலைவர் விஜயகாந்த் நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.க தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சாரங்கபாணி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாலும், கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையாலும் அவர் வகித்து வந்த மாவட்ட கழக பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும் அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.
என்.மருதையன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைமைக் கழக பேச்சாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
அவருக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.