Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் நுட்ப மைய‌ம்: அமைச்சர் பொன்முடியுட‌ன் கனடா குழுவினர் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:39 IST)
தம ி‌ ழ்நாட்டில் உள் ள பல்தொழில் நுட்பப்பயிலகங்கள ி‌ன் திட்டச் செயல்பாடுகளை சென்று பார்வையிட ்ட கனடா குழு‌வின‌ர், ‌த‌‌மிழக உ‌ய‌ர்க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடியை ச‌ந்‌தி‌த்து தொ‌ழி‌ல் நு‌ட்ப மைய‌ங்க‌ள் அமை‌‌க்க உதவுவது கு‌றி‌த்து ஆலோசனை நட‌த்‌தின‌ர்.

கனடா இந்தியா கூட்டுப் பயிலகத ் திட்டம் ஒரு தொழில் நுட்பக்கல்வித ் திட்டம். இத்திட்டம் 1991ஆம் வருடம் கனட ா, இந்திய அரசின் ஒப்பந்தத்துடன ் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம், தம ி‌ழ ்நாட்டில் 1993-1999 ஆம் ஆ‌ண்டுக‌ளி‌ல் ஒன்பது பல்தொழில்நுட்பப் பயிலகங்களில் அமலாக்கப்பட்டது. தற்போது 92 பல்தொழில் நுட்பப் பயிலகங்களில் இத்திட்டத்தின் க ீ‌ழ் ஒரு வருடத்திற்க ு ஏறக்குறைய 30,000 மாணவர்கள், பொதுமக்கள ், தொழிற்துறையைச ் சார்ந்தவர்கள் பயனடைகிறார்கள ்.

இத்திட்டத்தின் மூலம் கனரக இயந்திரங்கள ை இயக்குதல், தங்க மதிப்பீடு ச ெ‌ய ்தல், ஆயுர்வேத அழகுக்கல ை, நறும ண சிகிச்சை, இரண்ட ு, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், குளிர்சாதனப் பெட்ட ி, குளிரூட்டி பழுது பார்த்தல், குழ ா‌ய் பழுது பார்த்தல், ஆகிய திறன் சார்ந்த தொடர் கல்வி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இத்திட்டம ் ஏழைகளின் சமுதா ய, பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இத்திட்டத்தின் வளர்ச்சியைக் கண்டு, 8 பேர் கொண்ட கனடா நாட்டவர் குழ ு கடந்த 3 நாட்களாக தம ி‌ழ ்நாட்டில் உள்ள சில பல்தொழில் நுட்பப்பயிலகங்களில ் இத்திட்டச் செயல்பாடுகளை சென்று பார்வையிட்டனர். இக்குழு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முட ிய ை இன்று தலைமைச ் செயலகத்தில் சந்தித்து தம ி‌ழ ்நாட்டின் பல்தொழில்நுட்பப் பயிலகங்கள ், கனட ா நாட்டின் சமுதாயக்கல்லூரிகளின் தொழில்நுட்பப் பரிமாற்றம ், தம ி‌ழ ்நாட்டில ் உயர்திறன் சார்ந்த தொழில் நுட்ப மையங்கள் அமைப்பதில் உதவுதல் ஆகியவ ை பற்றி விவாதித்தனர் எ‌ன்று த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments