தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் - உடனே நிறுத்த பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
, திங்கள், 2 ஏப்ரல் 2012 (11:57 IST)
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் பற்றி தனியாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.