மதுபான விளம்பரங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மதுபான விளம்பரங்களில் நடக்க கூடாது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தோனியை கண்டித்து சென்னையில் சேமியர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அருகே பசுமைத் தாயகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமைத் தாயகத்தை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.