Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக கூட்டணி பற்றி யாருடனும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை - தேமுதிக கொறடா

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2014 (12:49 IST)
FILE
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரபூர்வமாக யாருடனும் பேசவில்லை என்று தேமுதிக கொறடா சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது குறித்து நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளுக்கு தேமுதிக பொறுப்பல்ல. தேமுதிக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை.

பாஜக, திமுக, காங்கிரஸ் என மற்ற கட்சிகள்தான் எங்களைத் தொடர்பு கொண்டு பேசிவருகின்றன. ஆனால் நாங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கட்சிகளுடனும் பேசவில்லை. நாங்கள் ஏதோ பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இது தவறானது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதும், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments