தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அக்கட்சியினர் அங்கு தேர்தல் பணிகளை இப்போதே மும்முரமாக தொடங்கி உள்ளனர்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தனது மகள் சங்கீதாவை வேட்பாளராக அறிவிக்கலாம் என அதன் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் முடிவு செய்திருந்தார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து மகள் சங்கீதாவை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிபெறுவாரா என கருத்து கேட்டார்.
அப்போது ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நீங்களே (டாக்டர் கிருஷ்ணசாமி) போட்டியிட வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றிபெற முடியும் என்று கூறினர்.
இதனால் டாக்டர் கிருஷ்ணசாமி தனது முடிவை மாற்றி அவரே போட்டியிட தற்போது முடிவு செய்திருந்தார்.
இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.