Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் பதுங்கல்? கோவை, குற்றாலத்தில் தீவிர தேடுதல் பணி

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2007 (13:44 IST)
தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, குற்றாலம் வனப்பகுதியில் காவல் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட் டனர்.

தேனி மாட்டம் பெரியகுளம் மலை பகுதியில் பயங்கரமான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய மற்ற தீவிரவாதிகள் கோவை, குற்றாலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியில் காவல் துறையினர் தீவிர தேடுதல் பணி மேற்கொண் டனர். வன பகுதிகளான அணைகட்டி, பாலமலை உள்ளிட்ட பல பகுதிகளில் தேடுதல் பணி நடந்தது.

இதேபோல் குற்றாலம் வனப்பகுதியிலும் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா? என்று தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments