Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (18:18 IST)
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் இன்று மாலை நடைபெற்றது.

சுமார் 6 மணியளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, அண்ணாமலையார் கோயிலின் அர்ச்சகர் மலை உச்சிக்கு பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்துச் சென்று மகா தீபத்தை ஏற்றி வைத்தார்.

மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சியை பல லட்சக்கணக்கானோர் நகர் முழுவதும், சுற்றுவட்டாரங்களிலும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் அண்ணாமலையானுக்கு அரோகரா என கோஷமிட்டபடியே வழிபட்டனர்.

மகா தீப நிகழ்ச்சியையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மகா தீபம் ஏற்றப்பட்ட பின், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சமேதராக வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments