திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் மரியம் பிச்சனை சாலை விபத்தில் இறந்தத்தையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்டோபர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும், அ.தி.மு.க. சார்பில் பரஞ்சோதியும் போட்டியிடுகின்றனர். மேலும் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நான் என்பதால் 17 பேரின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவை திடீரென வாபஸ் பெற்றார்.
இதனால், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.