திருச்சி இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சிக்னல் கேபிள் எரிந்ததால் சென்னை குருவாயூர் விரைவு இரயில் உள்பட பல்வேறு இரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
திருச்சி அருகே உள்ள கிராப்பட்டி என்னும் இடத்தில் தண்டவாளம் அருகில் உள்ள செடிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தால் இரயில் சிக்னல் கேபிள், மின் கம்பிகளின் எரிந்து நாசமானது. இதனால் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
இது பற்றி தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள் அந்த வழியில் செல்லக்கூடிய அனைத்து இரயில்களையும் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து தீ உடனடியாக அணைக்கப்பட்டு சிக்னல் கேபிள், மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டது.
இதையடுத்து பல மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில்கள் புறப்பட்டு சென்றது.
இந்த விபத்து குறித்து ரயில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.