Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சியில் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது

திருச்சியில் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (14:47 IST)
FILE
திருச்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் 57 ஏக்கரில் ரூ.600 கோடியில் பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இந்தியன் ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டரில் 11.10 மணிக்கு திருமயம் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விமான நிலையம் நோக்கி செல்ல முயன்ற மதிமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil