திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என்றும், இந்தக் கூட்டணி ஒருபோதும் பிரியாது என்றும் முதல் அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் முக்தா வி. சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசுகையில் கருணாநிதி இவ்வாறு கூறினார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியால் தமிழகமும், இந்தியாவும் வளமையுடனும், வலிமையுடனும் விளங்குவதாகவும் கூறிய அவர், இக்கூட்டணி ஒருபோதும் பிரியாது என்றார்.