Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் : என்கவுன்டரில் ஒருவர் பலி

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (21:13 IST)
திண்டுக்கல்லில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.

மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 3 பேர் திண்டுக்கல் பேருந்துநிலையம் எதிரே உள்ள லாட்ஜில் தங்கியிருந்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் தங்கியிருந்த லாட்ஜை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். வரிச்சியூர் செல்வம் உட்பட 3 பேரை காவல் துறையினர் சரண் அடைய கூறினர்.

ஆனால் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அதற்கு காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் கேரளத்தை சேர்ந்த சுநோஜி என்பவர் துப்பாக்கி சூட்டில் பலியானார். மற்றவர்களை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

ஆள் கடத்தல் வழக்கில் வரிச்சியூர் செல்வம் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments