Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2014 (17:58 IST)
FILE
தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை இரவு தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன் உள்பட இருவரை காவல்துறை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள வாளமர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தோழப்பனுக்கு 3 மகன்கள். இவர்களில் முதல் இரு மகன்களான வீரரத்தினகுமார், முருகானந்தம் ஆகியோருக்குத் திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகனான குமாருக்கு (35) திருமணமாகவில்லை. தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு வீரரத்தினகுமார், முருகானந்தத்திடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குமாருக்கும், முருகானந்தத்துக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவனின் வீட்டுத் திண்ணையில் திங்கள்கிழமை நள்ளிரவு குமார் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, குமாரை முருகானந்தம் உள்பட இருவர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்தக் காயமடைந்த குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு குமார் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக முருகானந்தம் உள்பட இருவரை தஞ்சாவூர் தாலுகா காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments