" மெட்ரிக ் பள்ளிகளில ் தமிழ்ப ் பாடம ் கட்டாயமா க கற்பிக் க வேண்டும ். இல்லாவிட்டால ் அந்தப ் பள்ளிகள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ்'' என்ற ு தமிழ க அரச ு எச்சரித்துள்ளத ு.
சட்டப ் பேரவையில் நடைபெற் ற பள்ளிக ் கல்வித ் துற ை மானியக ் கோரிக்க ை மீத ு நடைபெற் ற விவா தத்தில் பங்கேற்று பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ஏழைகளுக்கும், கிராமத்தினருக்கும் தரமான கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் ஒரே சமமான, சீரான சமச்சீர் கட்டாயக் கல்வி வழங்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் 14 சதவீதம் தான் கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தான் அனைவரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அரசு அறிவித்துள்ளது, ஆனால் அது நடைமுறையில் இல்லை. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேர்தலுக்கு முன் சமச்சீர் கல்வி வரும் என்று முதலமைச்சர் கூறினார். பின் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தரப்பட்டுள்ளது. அதன்பின் விஜயகுமார் குழு அமைத்தது தேவையில்லை. சமச்சீர் கல்வி வராது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அது நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பதை அறிவிக்க வேண்டும்.
தமிழ் ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் அது நடைமுறையில் இருக்கிறதா? ஆசிரியர் தேர்வு மாநில அளவில் பதிவு மூப்பு என்பதை மாவட்ட அளவிலேயே கொண்டுவர வேண்டும். இதனால் 28 மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதனை அரசு தான் ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந் த 2006 ஆம ் ஆண்ட ு, இத ு குறித் த அறிவிப்ப ை அரச ு வெளியிட்டத ு. மெட்ரிக ் பள்ளிகளில ் ஒவ்வொர ு ஆண்டும ் ஒவ்வொர ு வகுப்பா க ஆரம்பித்த ு 10 ஆம ் வகுப்ப ு வர ை தமிழ ் பாடத்தைக ் கட்டாயமாக் க அரச ு முயற்சித்த ு வருகிறத ு. அதன்பட ி, 1 முதல ் 4- ம ் வகுப்ப ு வர ை தமிழ்ப ் பாடம ் கட்டாயமாக்கப்பட்டுள்ளத ு. அப்பட ி கற்றுக ் கொடுக்கா த பள்ளிகள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும் என்றார்.