Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 42 பேரை ‌சிறை‌‌பிடி‌த்தது ‌சி‌றில‌ங்க ராணுவ‌ம்!

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2014 (10:57 IST)
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனர்வகள் 42 பேரை சிறிலங்க கடற்படையினர் கைது செய்துள்ளனர். 
 
700க்கும் அதிகமான படகுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று புறப்பட்டுச் சென்றனர். 
இந்நிலையில், தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர், 8 மீன்பிடி இயந்திர படகுகளையும், 42 மீனவர்களையும் கைது செய்து இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 
 
ஒருபுற‌ம், நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை அழைத்ததற்காக நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்கள் 26 பேர் விடுவிக்கப்பட்டாலு‌ம், மறுபுற‌ம் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது தொட‌ர் தா‌க்குத‌ல்களு‌ம், கைது நடவடி‌க்கைகளு‌ம் ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யினரா‌ல் தொட‌ர்‌ந்து அர‌ங்கே‌றி‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments