தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்று மண்டலத்தில் மேகக் கூட்டங்களுக்கு இடையே ஏற்பட்ட சுழற்சி, நேற்று அரபிக்கடலுக்கு நகர்ந்து மேகக்கூட்டங்களுக்கு இடையே மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும், தெற்கு- உள் கர்நாடகம், கடலோர கர்நாடகம், கடலோர ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.