Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Ilavarasan

, சனி, 3 மே 2014 (19:11 IST)
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil