டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் நெல்லை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தை தொடர்ந்து இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பக்கத்து மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கும் டெங்கு நோய் பரவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று வரை 30 பேர் பேர் பலியாகியுள்ளனர். வேம்பார் அருகே உள்ள சிப்பிகுளத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை பியானி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.
நேற்றிரவு குழந்தை பியானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதனால் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
பாளை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 155 குழந்தைகள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்னர். இதில் 110க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 3 வார்டுகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவ கொசுவே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்ல தண்ணீரில்தான் இந்த கொசு வளர்கிறது. டெங்கு காய்ச்சல் பாதித்த ஒருவரை கொசு கடித்துவிட்டால் மற்றொருவரை கடிக்கும்போது இந்த நோய் பரவி வருகிறது.
முதன் முதலில் கடையநல்லூரில்தான் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காரணம் இன்று கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாகும். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை பிடித்து சேமித்து வைக்கின்றனர். இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தி ஆகி வருவதால், தண்ணீர் தேக்கி வைக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.