டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை நிராகரித்துள்ளது.
''வருகிற 11ஆம் தேதி நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி. குருப்2 தேர்வுக்கு கார்பன் அடங்கிய விடைத்தாள் வழங்க வேண்டும்'' என்று கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் ஜி.தியாகராஜன், 2 மனுக்களை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரித்தனர். அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் ஹெரால்டுசிங், ''இந்த தேர்வை 4 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அவர்களுக்கான வினாத்தாள் தயாராக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் கார்பன் அடங்கிய பேப்பரை வழங்குவது என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் முடியாது. இந்த தேர்வுக்கு தடை விதித்தால் 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்'' என்றார்.
இதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தனர் நீதிபதிகள்.