அ.தி.மு.க. பொதுச் செயலரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடிவுக்கு வந்தது.
அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை பற்றி செய்திகள் வெளியிடும் போது அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று நக்கீரன் பத்திரிகைக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் பத்திரிகை அவதூறு செய்தி வெளியிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இதனிடையே, நக்கீரன் கோபால், ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.