ஜெயலலிதா பேச்சுக்கு எதிர்ப்பு - தி.மு.க. வெளிநடப்பு
, புதன், 28 மார்ச் 2012 (11:57 IST)
தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.2012-13
ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கடந்த 26ஆம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பட்ஜெட் திட்டங்களை ஜெயலலிதா முன்னதாகவே அறிவித்துவிட்டதாக குற்றம்சாற்றியிருந்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது, மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாற்றுக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ஸ்டாலின் கூறியது அறியாமையா என தெரியவில்லை என்றார்.அவை மரபு, விதிகளை மீறவில்லை என்று ஜெயலலிதா விளக்கம் அளித்ததோடு, பால் கமிஷன் அறிக்கையை பேரவையில் வைக்கும் முன் கருணாநிதி வெளியிட்டார் என்றார். ஜெயலலிதாவின் இந்த புகாருக்கு பதில் அளிக்க தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி மறுத்ததால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.