Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதாவு‌க்கு வெடிகு‌ண்டு ‌மிர‌ட்‌ட‌ல் ‌வி‌டு‌த்த பெ‌ண் கைது

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2011 (15:16 IST)
முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு வெடிகு‌ண்டு ‌மி‌ர‌ட்ட‌ல் ‌விடு‌த்த பெ‌‌ண்ணை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலுவலக‌த்து‌க்கு கட‌ந்த 1ஆ‌ம் தே‌தி வ‌ந்த தொலைபே‌சி அழை‌ப்‌பி‌ல், ''ஜெயலலிதா அம்மாவுக்கும், அவரது அலுவலகத்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று பேசி விட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார்.

உடனடியாக திருவல்லிக்கேணி காவ‌ல்துறை‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து வெடிகுண்டு நிபுணர்களுட‌ன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்கு பிறகு வெறும் மிரட்டல் தகவல் என்று தெரியவந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு ‌விசாரணை மே‌ற் கொ‌ண்டு வ‌ந்தன‌ர்.

இத‌னிடையே கடலூரில் இருந்து பேசி அ‌ந்த ம‌ர்ம பெ‌ண்ணை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று மறைமலைநக‌ரி‌ல் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். அவ‌ரிட‌ம் தொட‌ர்‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments