முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு கடந்த 1ஆம் தேதி வந்த தொலைபேசி அழைப்பில், ''ஜெயலலிதா அம்மாவுக்கும், அவரது அலுவலகத்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று பேசி விட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார்.
உடனடியாக திருவல்லிக்கேணி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனைக்கு பிறகு வெறும் மிரட்டல் தகவல் என்று தெரியவந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற் கொண்டு வந்தனர்.
இதனிடையே கடலூரில் இருந்து பேசி அந்த மர்ம பெண்ணை காவல்துறையினர் இன்று மறைமலைநகரில் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.