Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரூ நீதிமன்றம்

ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரூ நீதிமன்றம்
, சனி, 21 ஏப்ரல் 2012 (16:47 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா செய்திருந்த கோரிக்கை மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தாக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் முக்கிய ஆவணங்களைப் படித்துப் பார்க்க அனுமதிக்கும்படி ஜெயலலிதாவும், சசிகலாவும் மனு தாக்கல் செய்திருந்தன.

மனுவை விசாரித்த பெங்களூரூ நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஆவணங்களைப் படிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil