சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் 3 நாட்களில் பேனர்களை அகற்ற வேண்டும் என்பது அரசு விதியாகும்.
இதனால் பிறந்தநாள் பேனர்களை அகற்றுமாறு தொண்டர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டது.
இதையடுத்து அதிமுகவினர் சென்னையில் தாங்கள் வைத்திருந்த பேனர்களை அகற்றினர். இதுபோல தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டன.