சொத்து குவிப்பு வழக்கில் தனது வாக்குமூலத்தை தமிழில் பதிவு கோரி முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் மனு மீதான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினரகன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரபடி முதலமைச்சர் ஜெயலலிதா 4 முறை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், தனது வாக்குமூலத்தை தமிழிலில் பதிவு செய்ய கோரியும், குறுக்கு விசாரணையின்போது தமிழிலேயே கேள்வி கேட்க கோரியும் சசிகலா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் நீதிபதி ஆனந்த் தீர்ப்பு வழங்க உள்ளார்.