புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாளை நடைபெற உள்ள சங்கரராமன் கொலை வழக்கில் அரசு சாட்சிகளிடம் நடத்தப்பட இருக்கும் குறுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.
இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் குறுக்கு விசாரணை நடைபெற வாய்ப்பில்லை என்று பார் அசோசியேசன் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமிக்கக் கோரி கடந்த 5 நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.