Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோளிங்கர் கோ‌யி‌‌லில் ரோப் கார் அமை‌க்‌கிறது த‌மிழக அரசு

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (09:34 IST)
வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் சோ‌ளி‌ங்க‌ர் ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மசுவா‌மி ‌திரு‌க்கோ‌‌யி‌‌லி‌ல் த‌‌மிழக அரசு சா‌ர்‌‌பி‌ல் ரோ‌ப் கா‌ர் அமை‌க்க‌ப்படு‌கிறது. இத‌ற்கான ஆலோசனைகள் வழங்க வல்லுனர் குழு ஒ‌ன்றை அமை‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி உத்த ர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று, வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) அமைப்பது என அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி பரிசீலனை செய்தல், ஒப்பந்ததாரர் நிர்ணயம் செய்தல் போன்றவற்றிற்கு தக்க ஆலோசனைகளை வழங்கிட வல்லுனர் குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இக்குழுவில் இந்திய தொழில்நுட்பக்கழகம்-கட்டுமான ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், பொதுப்பணித்துற ை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவற்றின் அனுபவம், மிக்க அலுவலர்களும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும் இடம்பெற்றுள்ளனர் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments