சேவாலயாவின் ஒப்பற்ற சேவை - அமைச்சர் பாராட்டு
''
சேவாலயாவின் ஒப்பற்ற சேவை'' என்று அமைச்சர் ரமணா பாராட்டியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே அமைந்துள்ள கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை மையத்தில் கடந்த 23ஆம் தேதி சேவாலயா மகள் செல்வி- குமாரன் விஜயசெந்தில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தை நடத்தி வைத்து அமைச்சர் பி.பி. ரமணா பேசுகையில், பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பை அளிப்பதோடு தன்னுடைய சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.ஆனால் சேவாலயா நிறுவனமானது ஒரு படி மேலே சென்று பள்ளிப் படிப்பை கொடுத்ததோடு அவர்கள் வாழ்க்கையிலும் ஒளியை ஏற்றி வைப்பது பெருமையாக உள்ளது. மேலும் இச்சேவை நிறுவனமானது திருவள்ளூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றார்.
இந்த திருமண விழாவில் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன், திரைப்பட நடிகை ரேவதி, சேவாலயா இல்லத்தைச் சார்ந்த முன்னாள் மாணவ - மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.