வெட்டுக்கிளிகளை அழிக்க நூதன கூண்டு! சேலம் மாணவர் கண்டுபிடிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (17:55 IST)
வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதமாகும் நிலையில் அதை அழிக்க சேலம் பொறியியல் மாணவர் ஒரு மின் வளையை கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படைகள் ஊடுருவி, பயிர்களை தேசம் செய்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. தமிழகத்தில் கூட கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் கூட்டம் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மின் வளையை வடிவமைத்துள்ளார். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு வித துளை அளவுகளில் இரு கம்பிகள் அமைக்கப்பட்டு அதன் நடுவில் பல்ப் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் வெட்டுக்கிளிகள் அதனுள் வரும் போது மின்சாரம் தாக்கி அழிக்கப்படும். இந்த வளையின் மூலம் வினாடிக்கு 100 வெட்டுக்கிளிகள் வரைக் கொல்லப்படும் என அம்மாணவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட கொசு பேட் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைக்கு ஒரு ஏக்கருக்கு 11 ஆயிரம் வரை செலவாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments