கல்வி துறையில் தனியார் பங்கேற்பை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மெமோரியல் ஹால் முன்பு தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 6வது ஊதிய முரண்பாடுகளை முழுமையாக மாநில அரசு களைய வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.