Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌க்‌ஸ் கொடுமை தா‌ங்காம‌ல் கணவரை து‌ண்டு ‌து‌ண்டாக வெ‌ட்டி‌க் கொ‌ன்ற மனை‌வி

Webdunia
சனி, 15 டிசம்பர் 2012 (09:38 IST)
FILE
FILE
செக்ஸ் கொடுமை தாங்க முடியாததால் கணவரை அடி‌த்தே‌க் கொ‌‌ன்ற மனை‌வி, ‌பி‌ன்ன‌ர் உடலை 5 துண்டுகளாக வெட்டி எரிக்க முயன்ற ச‌ம்பவ‌ம் செ‌ன்னை‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த மணி (65) - ப‌த்மாவ‌தி (55) த‌ம்ப‌தி‌க்கு யுவராஜ் (21), தனலட்சுமி (25) எ‌ன்ற ‌பி‌‌ள்ளைக‌ள் இரு‌க்‌கி‌ன்றன. போதைப்பழக் க‌ம் கொ‌ண்ட ம‌ணி, பல பெண் க‌ளிட‌ம் செ‌க்‌ஸ் அனுப‌வி‌த்து வ‌ந்து‌ள்ளா‌ர். பல பெ‌ண்களுட‌ன் கணவ‌ன் தொட‌ர்பு வை‌த்‌திரு‌ந்ததை ப‌த்மாவ‌தி க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்.

அதோடு ப‌த்மாவ‌தி‌க்கு அடிக்கடி செக்ஸ் தொல்லையும் கொடுத்து வந ்து‌ள்ளா‌ர் ம‌‌ணி. ப‌த்மாவ‌தி பலமுறை க‌ண்டி‌த்து‌ம் ம‌ணி ‌திரு‌ந்த பாடி‌ல்லை. மகன் யுவராஜும் தந்தையை கண்டித்து உள்ளார். பத்மாவதியிடம் காம கொடூரன் போல் நடந்து கொண்ட மணி, போதையில் அவரை அடித்து உதைப்பதும் உண்டு.

கணவரின் தொந்தரவு தாங்க முடியாமல் தவித்த பத்மாவதி, நேற்று வீட்டில் கணவ‌ன் ம‌ணி இருந்த போது அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். குளித்துவிட்டு தலைக்கு சாயம் பூசிக் கொண்டு இருந்த மணியின் தலையில், அவர் பின்னால் இருந்து சுத்தியலால் பலமாக அடித்தார். இதனால் மண்டை உடைந்த மணி அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். மணி செத்ததால் அதிர்ச்சி அடைந்த பத்மாவதி உடனே கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் தனது மகன் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தார்.

FILE
யுவராஜ் கூறியபடி உடலை தலை, கை, வயிற்றுப்பகுதி, கை, கால்கள் என்று தனித்தனியாக வெட்டினார். பிற்பகல் 2 மணிக்கு மணி யுவராஜ் அங்கு வந்தார். அவர் வந்ததும் வெட்டிய உடல் பாகங்களை 2 பைகளில் போட்டனர். வயிற்றுப் பகுதியில் வெட்டப்பட்ட 2 பாகங்களை பைகளில் திணிக்க முடியாததால், பின்னர் கடலில் வீசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அந்த பாகங்களை மட்டும் வீட்டிலேயே வைத்து விட்டனர். தலை உள்பட மற்ற பாகங்கள் வைக்கப்பட்ட 2 பைகளையும் எடுத்துக் கொண்டு அவற்றை எரிப்பதற்காக தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். மணலி அருகே எரிக்க திட்டமிட்டு அங்கு கொண்டு சென்றனர்.

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயின் அருகே ஒரு மறைவான இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க தொடங்கினர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள், திடீரென்று கால்வாய் ஓரத்தில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் எரிக்கப்படுவதை பார்த்து, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து மணலி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மணலி பெண் சப் இன்ஸ்பெக்டர் பாரதி அங்கு விரைந்து சென்று, தாய் பத்மாவதியையும், மகன் யுவராஜையும் கைது செய்தார். உடல் பாகங்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட தாய் பத்மாவதியும், மகன் யுவராஜும் மணலி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். செக்ஸ் தொல்லை கொடுத்த கணவரை மனைவி கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!