Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்மொழி மாநாடு: பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக எம்.ரவி நியமனம்

செம்மொழி மாநாடு: பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக எம்.ரவி நியமனம்
சென்னை , வெள்ளி, 1 ஜனவரி 2010 (16:49 IST)
கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக சென்னை நகர கூடுதல் காவல்துறை ஆணையர் எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழ் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக சென்னை நகர கூடுதல் காவல்துறை ஆணையர் எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கூடுதல் கமிஷனர் பதவியுடன் இந்த பொறுப்பை கூடுதலாக அவர் கவனித்துக் கொள்வார்.

செம்மொழி மாநாட்டின் தனி அதிகாரி கே.அலாவுதீன் மற்றும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள், உளவுப் பணிகள் ஆகியவற்றையும் கவனித்துக் கொள்வார” எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil