Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்.30க்குள் அரையாண்டு சொத்துவரியை செலுத்த மாநகராட்சி வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (15:55 IST)
இந்த ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தும்படி சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

2009-2010 ம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்துவரியினை சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இல்லையெனில், நிலுவை சொத்துவரி ஏதேனுமிருப்பின் அதனுடன் சேர்த்து 30.09.2009க்குள் சொத்துவரியினை செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சொத்துவரியினை காசோலை அல்லது கேட்புக் காசோலை மூலமாக 'வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி' என்ற பெயரில் வரி வசூலிப்பாளர்கள் அல்லது சென்னை மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மூலமும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உள்ள பொதுமக்களுக்கான விசேஷ கெளண்டர்கள் மூலம் அனைத்து நாட்களிலும் செலுத்தலாம்.

சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தை பயன் படுத்தி ஆன்-லைன் மூலமும் சென்னை மாநகராட்சிக்கு செலுத்திடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments