2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியத்தை தொடர்ந்து இன்று சென்னை வந்த மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி தி.மு.க.வினர் வரவேற்றனர்.
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த கனிமொழிக்கு கடந்த 28ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12.30 மணியளவில் சென்னை வந்த கனிமொழியை தி.மு.க தலைவரும், தந்தையுமான கருணாநிதி, சகோதரர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
கனிமொழியின் குடும்பத்தாரும், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களும் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்பு வந்தனர்.
சென்னை வந்த கனிமொழிக்குத் தி.மு.க.வினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.