Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நகர காவ‌ல்துறை கூடுதல் ஆணையராக எம்.ரவி நியமனம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2009 (10:09 IST)
வடசென்னை இணை ஆணைய‌ர் எம்.ரவி, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை நகரின் கூடுதல் காவ‌ல்துறை ஆணையராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில ், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அமரேஷ் பூஜாரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை பயிற்சி ஐ.ஜி.யாக ‌ நிய‌‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

வடசென்னை இணை ஆணைய‌ர் எம்.ரவி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை நகரின் தலைமையக கூடுதல் காவ‌ல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

த ென்மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி.யாக உள்ள டாக்டர் கே.ஜெயந்த்முரளி ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி. கருணாசாகர் ஐ.ஜி.யாக பத‌வி உய‌ர்வு பெ‌ற்று‌, திருச்சி நகர காவ‌ல்துறை ஆணையராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளா‌ர்.

நெல்லை நகர காவ‌ல்துறை ஆணைய‌ர் மஞ்சுநாதா ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ஊர்காவல் படைக்கு துணை கமாண்டண்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மண்டபம் அகதிகள் முகாமில் விசேஷ அமலாக்க அதிகாரியாக பணியாற்றும் டி.ஐ.ஜி. கிறிஸ்டோபர் நெல்சன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற ு‌ள்ளா‌ர். அவ‌ர் அதே மண்டபம் அகதிகள் முகாமில் விசேஷ அமலாக்க அதிகாரியாக பணியாற்றுவார் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தென்சென்னை இணை ஆணையராக இ‌ரு‌ந்த குணசீலன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற ு, நெல்லை ந கர பு‌திய காவ‌ல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சி.பி.சி.ஐ.டி. விசேஷ பிரிவு டி.ஐ.ஜி.யாக இருக்கும் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென்மண்டல (மதுரை) ஐ.ஜி.யாக ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் சஞ்சீவ்குமார் சென்னை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. சேஷசாயி வடசென்னை புதிய இணை ஆணையராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மத்திய அரசு பணியில் இருக்கும் டி.ஐ.ஜி. ஜி.வெங்கடராமன் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments