சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வரும் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 250 சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.