சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 6 பேர் நேற்று இரவு அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மற்றும் புறநகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 6 பேர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அளிக்கப்பட்டது.