சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வத ு மாநில மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஏ.பி.பரதன் கூறியதாவது:
சுரண்டலற் ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும். வளர்ச்சி அடை ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. மக்களின ் வாழ்வாதாரத்திற்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவம் தான். முதலாளித்துவத்தால ் வறுமையை ஒழித்து வி ட முடியாது.
நாட்டில் உள்ள எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக் க மத்திய அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு இடதுசாரிகள் கடும ் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் இன்னும் பொதுத்துற ை நிறுவனங்கள் இங்கு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியை போலவே பாரதீய ஜனதாவும் முதலாளித்துவத்தை வளர்த்த ு வந்தது.
தற்போது பா.ஜ.க. இந்திய மக்களை பல வகுப்புகளாக பிரித்து ஆட்சிக்கு வ ர முயற்சி செய்கிறது. இக்கட்சிகளுக்கு மாற்றாக மத்தியில் இடதுசாரிகள் மட்டும் இருக்க முடியும ் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு இதற்காக போராட முன்வர வேண்டும். வருகி ற 28- ந்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் வரலாற்று சிறப்புமிக்க மக்கள ் எழுச்சி போராட்டமாக அமைய வேண்டும்.