Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரண்டல், அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும்: பரதன்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2012 (12:54 IST)
சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வத ு மாநில மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஏ.பி.பரதன் கூறியதாவது:

சுரண்டலற் ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும். வளர்ச்சி அடை ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. மக்களின ் வாழ்வாதாரத்திற்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவம் தான். முதலாளித்துவத்தால ் வறுமையை ஒழித்து வி ட முடியாது.

நாட்டில் உள்ள எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக் க மத்திய அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு இடதுசாரிகள் கடும ் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் இன்னும் பொதுத்துற ை நிறுவனங்கள் இங்கு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியை போலவே பாரதீய ஜனதாவும் முதலாளித்துவத்தை வளர்த்த ு வந்தது.

தற்போது பா.ஜ.க. இந்திய மக்களை பல வகுப்புகளாக பிரித்து ஆட்சிக்கு வ ர முயற்சி செய்கிறது. இக்கட்சிகளுக்கு மாற்றாக மத்தியில் இடதுசாரிகள் மட்டும் இருக்க முடியும ் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு இதற்காக போராட முன்வர வேண்டும். வருகி ற 28- ந்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் வரலாற்று சிறப்புமிக்க மக்கள ் எழுச்சி போராட்டமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments