போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிவாஜி சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றக்கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக சிவாஜி சிலையை அகற்ற கூடாது என சிவாஜி கணேசன் சமூகப்பேரவை மனுத்தாக்கல் செய்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அக்னி ஹோத்ரி, சசிதரன் அமர்வு சிலையை அகற்ற உத்தரவிட்டது. எவ்வளவு விரைவில் சிலையை அகற்ற முடியுமோ அகற்றலாம் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.