Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடல்

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடல்
விருதுநகர் , சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:55 IST)
காவ‌ல்துறை‌யின‌‌ரி‌ன் சோதனையை கண்டித்து சிவகாசி பகுதியில் சுமார் 650 பட்டாசு ஆலைகள் இன்று 2-வது நாளாக மூடிக்கிட‌க்க‌ி‌ன்றன.

இதனால் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து தவிக்கின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று 2-வது நாளாக ஆலைகள் மூடப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் சிவகாசி பகுதியே பரபரப்பின்றி காணப்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக விரைவில் முலமைச்சர், துணை முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil