Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணபவன், ஆனந்தபவன் ஓட்டல்களில் ஐ.டி ரெய்டு

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2013 (11:05 IST)
FILE
தமிழகத்தின் பிரபல ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தபட்ட ஓட்டல் அதிபர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வருவதாக புகார் அளிக்கபட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக பிரபலமான ஓட்டல்களான சரவணபவன் மற்றும் அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் உரிமையாளர்களுக்கு சொந்தமான விடுதிகள் ஆகியவற்றில் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

முறையான வரி செலுத்தாமை, அதிகபடியான விலை, சொத்து வாங்கி குவித்தது உள்ளிட்ட புகார்கள் இந்த ஓட்டல் நிர்வாகத்தின்மீது அளிக்கப்பட்டதால் ரெய்டு நடத்தப்படுகிறது எனவும் மொத்தம் 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டில் ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மட்டும் இல்லாமல், தூத்துக்குடி,மதுரை, டெல்லி, பெங்களூர், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிரபல ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்படுவதாகவும் அங்குள்ள வருமான வரி மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments