சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 16 ஆயிரத்து 56 சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் மூலம் நிரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முக தேர்வு நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கு ஜூன் மாதம் 2ஆம் தேதி அழைப்பு கடிதம் அனுப்பப்படும் பின்னர், ஜூன் 9 ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 15 ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.