சத்தியில் சமுதாய மறுமலர்ச்சி பேரவை துவக்கம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இஸ்லாமியர் சார்பாக சமுதாய மறுமலர்ச்சி பேரவை துவங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பாக சமுதாய மறுமலர்ச்சி பேரவை என்ற புதிய சமூக அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் அறிமுக கூட்டம் சத்தியமங்கலம் என்.கே. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முஹம்மத்கான் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் பாசில் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், சத்தியமங்கலத்தில் உள்ள முஸ்லீம் வக்பு சொத்துக்களை விரைவில் முஸ்லீம்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முஸ்லீம்கள் மீது அவதூறும் பொய் செய்தியும் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கையில் மிலாது நபி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.