Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி விடுதிக் கட்டிடம் இடிப்பு

Webdunia
வியாழன், 1 ஜனவரி 2009 (16:13 IST)
சென்னை மில்லர்ஸ் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி, பாழடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது.

இந்த விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதி பாழடைந்து மாணவர்கள் தங்க முடியாத நிலையில் இருந்தது. மேலும், மழை காலத்தில் இங்கு தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இதையடுத்து, சமீபத்தில் இந்த விடுதியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு அதனை மாணவர்கள் பொழுதுபோக்கு வசதிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க உத்தரவிட்டார்.

அரசு சட்டக்கல்லூரி வருகிற 19ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதற்குள் விடுதிக் கட்டிடத்தை முழுமையாக இடித்து பணிகளை முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு விடுதி மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments