சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் துணைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா தொடர்பான விசாரணை நடைமுறைகளை சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு 6 வாரம் தடை விதித்திருப்பதாகவும், அந்த தடை ஜனவரி 30-ம் தேதி அமலில் இருக்கும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் மணிஷங்கர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா உத்தரவிட்டார்.