கர்நாடகாவால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தமிழக அரசு எச்சரிக்கை
, செவ்வாய், 4 டிசம்பர் 2012 (17:04 IST)
''
கர்நாடகா அரசு உடனே தண்ணீர் திறக்காவிட்டால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்'' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வைத்தியநாதன், குடிநீருக்கு 23 டிஎம்சி தேவை என்று கர்நாடகா கூறுவது தவறு என்றும், இது நதிநர் பங்கீட்டு சட்டத்திற்கு புறப்பானது என்றும் வாதிட்டார்.மேலும், கர்நாடகா தண்ணீர் திறக்காவிட்டால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள 14.5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகி விடும் என்றும் அவர் கூறினார்.கர்நாடகா உடனே தண்ணீர் திறக்காவிட்டால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.