Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் சொத்து பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை: இந்து முன்னணி பாராட்டு

Webdunia
சனி, 15 மே 2010 (16:19 IST)
கோயில் சொத்துக்களை பாதுகாப்பது குறித்து அரசு எடுத்த முடிவுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்தும், அந்த நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருந்தும் வருகின்றனர்.

ஆனால் அரசு நிர்ணயித்துள்ள அடிமனை வாடகையும் கூட செலுத்தாமல் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருந்தும் வருகின்றனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முன்னோர்கள் பலர் தங்களது சொத்துக்களை கோவில்களுக்கு கொடுத்துள்ளனர்.தற்போது இந்த சொத்துக்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் விளக்கம் அளிக்கையில், கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்பது, அந்த சொத்துக்களை சீராக பராமரிப்பது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

கோவில்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.கோவில்களில் திருட்டுக்கள் மற்றும் மோசடிகிளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் சொத்துக்கள் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கும்,கோவில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததற்கு தமிழக அரசை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமகோபாலன் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments